தமிழ்குடி ஒற்றுமையே!

தமிழனத்தின் விடுதலை!

தமிழகம்

எதற்காக நாங்கள் தெலுங்கர் இராமசாமி நாயுடு வை வழிகாட்டியாக ஏற்கவேண்டும்??

இராமசாமி நாயுடவை வழிகாட்டியாக ஏற்றவர்கள் கீழே அவர் கூறிய வழிகாட்டுதல் படிவாழ்கிறார்களா? தன் வீட்டு பெண்களை இராமசாமி கூறிய அறிவுறைப்படி தான் விரும்புகிறார்களா??

பதில் கூறிவிட்டு தாராளமாக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள்...

#தமிழ் காட்டுமிராண்டி பாஷை!

#தமிழால் என்ன நன்மை?

#தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்!

#பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்!

#வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

#தொல்காப்பியன் மாபெரும் துரோகி

#தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

#சிலப்பதிகாரம்: இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, "பத்தினி'த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில், மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்..

#வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

#பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

#தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்..

#தமிழனுக்கு தனிவழி கிடையாது !

தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது. -குடியரசு' (27.11.43)

#தமிழின் பெயரால் பிழைப்பு !

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், "தமிழைக் காக்க வேண்டும், தமிழுக்கு உழைப்பேன், தமிழுக்காக உயிர் விடுவேன்' என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக் கூடாது.- "விடுதலை' (16.3.67)

#தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது !

தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். -“விடுதலை' (27.11.43)

#இன்றைய தேவை ஆங்கிலம் !

நாம் இன்றைய நிலைமையை விட வேகமாக முன்னேற வேண்டுமானால் - ஆங்கிலம்தான் சிறந்த சாதனம் என்றும், ஆங்கிலமே அரசியல் மொழியாகவும், போதனை மொழியாகவும் இருந்தாக வேண்டுமென்றும், ஆங்கில எழுத்துக்களே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களாவது அவசியம் என்றும், ஆங்கிலமே நம் பேச்சு மொழியாவது நலம் பயக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் - "மொழியும் அறிவும்' நூலில்

#முட்டாள்தனம் !

இந்த அதிசய காலத்தில் "எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன்' என்று முட்டாள் தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?”விடுதலை' (14.11.1972)

#ஒரு தமிழ் நூல் கூட இல்லை!

எனவே, தமிழன் இன்றைய நிலையில் தனது வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் என்று தெரிந்து கொள்ளத்தக்க கருத்துக்களைக் கொண்ட தமிழ் நூல் ஒன்று கூட இன்று நமக்கில்லை. “விடுதலை' (28.3.60)

#கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி ! #பெண்களுக்கு அறிவுறை

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

#ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

#திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது

இராமசாமி நாயுடவை வழிகாட்டியாக ஏற்றவர்கள் கீழே அவர் கூறிய வழிகாட்டுதல் படி வாழ தயாரா?

தன் வீட்டு பெண்களை இராமசாமி கூறிய

அறிவுறைப்படி தான் விரும்புகிறார்களா??

பதில் கூறிவிட்டு தாராளமாக வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளுங்கள்...

தமிழர் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும்,

மெய்யியலையும் வாழ்வியல் மரபையும்

கொச்சை படுத்தி அழித்த தமிழ்இனதுரோகி

இராமசாமி நாயுடு தமிழர் அரசியலுக்கு

ஏன் தேவைபடுகிறார்?

-தமிழர்குடிகள்

4415994931091744300400.jpg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *





பிரபலமானவை